பக்கங்கள்

23 நவம்பர் 2010

திரு. பிராகாஷ் சாமியிடம் எச்சரிக்கையாக இருங்கள்!

நியூயோர்க்கில் தன்னை ஊடகவியலாளர் மற்றும் செய்தியாளர் என்றும் கூறிக்கொள்ளும் திரு. பிரகாஷ் சாமி என்பவர் தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டுவருவதாக வட அமெரிக்க தமிழ் சங்கப்பேரவையின் தலைவர் திரு.பழனி சுந்தரம் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள தலைவர்களுக்கும் அமெரிக்கத் தமிழ் உணர்வாளர்களுக்கும்,
வணக்கம், FETNA வில் நாம் பின்வரும் ஒரு ஒழுங்கு நடவடிக்கை குறித்த முக்கிய அறிக்கையை சங்கத்தின் உறுப்பினர்களின் பார்வைக்கு கொண்டுவருகிறோம். நியூ யார்க் தமிழ் சங்கத்தின் பொது செயலாளரான திரு பிரகாஷ் சாமி, FETNA வுக்கு எதிரான நடவடிக்கைகளில் சில ஆண்டுகளாக ஈடுபட்டு வந்திருப்பது பல சந்தர்பங்களில் நமது NYTS குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது . மேலும் சமீபத்தில் திரு சாமி அவர்கள் இதன் உச்சகட்டமாக FETNA விற்கு எதிரான மினஞ்சல் ஒன்றினை இந்திய அரசாங்க உயர் அதிகாரிக்கு அனுப்பியுள்ளார். உங்களில் பலருக்கு திரு சாமி இவ்வாறு FETNA விற்கு எதிராக செய்யப்பட்டு வந்திருப்பது ஏற்கனவே தெரிந்திருக்கும். இன்னும் நமக்கு தெரியாமல் திரு சாமி இவ்வாறு FETN விற்கு எதிராக மேலும் பலவாறாக செய்யல்பட்டிருக்கலாம் என்பதே நம் உறுதியான நம்பிக்கை.
இதன் காரணமாக திரு பிரகாஷ் சாமி அவர்களை FETNA வின் உறுப்பினர் பதவிலிருந்து நீக்குவதாக நம் குழுவின் கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அறிவித்தல் வரும்வரை அவர் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார். இந்த ஒழுங்கு நடவடிக்கையானது FETNA குழுவில் உறுப்பினராக உள்ள பல்வேறு வட அமெரிக்க சங்கங்கள் நீண்ட கலந்துரையாடலுக்கு பின்னர் பல்வேறு வாய்ப்புக்களையும் கவனத்தில் கொண்டு ஒருமனதாக எடுக்கப்பட்ட நடவடிக்கை. இது குறித்த உங்களின் கேள்விகளுக்கு என்னை அல்லது FETNA வின் அதிபரை தொடர்பு கொள்ளலாம்.
FETNA விற்கு உங்களின் ஆதரவிற்கு மிகுந்த நன்றிகள்
உண்மையுள்ள
Dr . பழனி சுந்தரம்
செயலாளர் FETNA [2008-10]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.