பக்கங்கள்

19 நவம்பர் 2010

லண்டனிலிருந்து கொழும்பு சென்ற தமிழ் ஊடகவியலாளர் கைது!

லண்டனைச் சேர்ந்த ஊடகவியலாளரான கார்த்திகேசு திருலோகசுந்தர் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
37 வயதான திருலோகசுந்தர் கொழும்பில் சுகவீனமுற்றிருக்கும் தனது தாயாரைப் பார்ப்பதற்காக இலங்கை சென்றிருந்த போதே கடந்த புதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து புலனாய்வுப்பிரிவினர் அவரைக் கைது செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவரவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தீபம் தொலைக்காட்சி, ஜிரிவி ஆகியவற்றில் பணியாற்றிய இவர் தற்போது ஐபிசி வானொலியில் பணியாற்றி வருகிறார். பிரிட்டிஸ் பாஸ்போர்ட்டிலேயே இவர் பயணமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.