பக்கங்கள்

09 நவம்பர் 2010

வெள்ளவத்தை கடற்கரையில் சல்வார் அணிந்த பெண்ணின் சடலம்!

வெள்ளவத்தை கடற்கரையில் நேற்று நண்பகல் இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. இச் சடலம் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலமென்றும் அப்பெண் ரோஸ் நிறத்திலான சல்வார் அணிந்திருந்ததுடன் கால்விரலில் மிஞ்சி அணிந்திருந்ததாகவும் இதிலிருந்து அவர் ஒரு தமிழ்ப் பெண்ணாக இருக்கலாமென ஊகிக்கப்படுகிறது.
ஆனால் இப் பெண்ணின் சடலத்தினை இதுவரையிலும் யாரும் அடையாளம் காணமுன்வரவில்லையென்றும் இதனால் யாரென்று அடையாளம் காண முடியாமல் உள்ளதாகவும் தெரிவிக்கும் வெள்ளவத்தை பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். இந்த பெண் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பில் உறுதியாக கூறமுடியாதுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
கரையொதிங்கிய சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.