பக்கங்கள்

10 நவம்பர் 2010

அமைச்சரின் வாயை மூட "ரொபி" கொடுத்த ரணில்!

அரச தரப்பினர் தொடர்ந்து இடையூறுகள் ஏற்படுத்திக் கொண்டிருந்ததையடுத்து அமைச்சரொருவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க "ரொபி' கொடுத்தனுப்பியதால் சபையில் பெரும் சிரிப்பொலி எழுந்தது. பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற அவசரகாலக் சட்ட நீடிப்பு விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றிக் கொண்டிருந்தார். இதன் போது அரச தரப்பினர் அவரின் உரைக்கு தொடர்ந்து இடையூறுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். இதையடுத்து திடீரென பாராளுமன்ற உதவியாளர் ஒருவரை அழைத்த ரணில் விக்கிரமசிங்க, தனது காற்சட்டைப் பொக்கற்றுக்குள் இருந்து “ரொபி’ ஒன்றை எடுத்து அந்த உதவியாளரிடம் ஏதோ கூறி கொடுத்தனுப்பினார்.
அவர் உதவியாளர் ரொபியுடன் அரசுப்பக்கத்துக்கு சென்று சற்று சிந்தித்து விட்டு அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவிடம் கொடுத்தார். என்னவென்று தெரியாமல் அதனை வாங்கிய அமைச்சர் அது ரொபி என்று தெரிந்தவுடன் சிரித்தவாறு தனக்கு வேண்டாமெனக் கூறி மேசை மீது வைத்து விட்டார். இதனால் சபையில் மட்டுமன்றி பார்வையாளர் கலரியில் இருந்த மாணவர்கள் மத்தியிலும் பெரும் சிரிப்பொலி எழுந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.