பக்கங்கள்

11 நவம்பர் 2010

இரும்புக் கதவு தாக்கி பெண் மரணம்!

இரும்பு உருள் கதவில் அகப்பட்டு பரிதாபகரமாக பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவமொன்று இன்று 11 அதிகாலை 12.30 மணியளவில் கொட்டகலை ரொசிட்டா நகரில் இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் 52 வயதுடைய கந்தசாமிப்பிள்ளை பரமேஸ்வரி என்பவராவார். கொட்டகலை ரொசிட்டா பஜாரிலுள்ள வீடொன்றின் முன்பக்க கதவு இரும்பினால் ஏற்படுத்தப்பட்டதாகும் இந்த வீட்டிற்கு கொழும்பிலிருந்து வந்த உறவினர்கள் மீண்டும் செல்வதற்காக வீட்டின் கதவினை திறந்து விட்டு உறவினர்கள் சென்ற பிறகு கதவினை கீழே இழுத்து விட்டு குனிந்து செல்ல முற்பட்ட போது வேகமாக கீழிறங்கிய இரும்பு கதவு இந்தப்பெண்ணின் கழுத்துப்பகுதியில் தாக்கியுள்ளது.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திலேயே இந்தப்பெண் உயிரிழந்துள்ளார். இதன் பின்பு இந்தச்சம்பவத்தை அறிந்தவர்கள் பத்தனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். தற்போது இறந்தவரின் சடலம் நுவரெலியா மாவட்ட நீதிவானின் வருகைக்காக அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.இந்தச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.