பக்கங்கள்

17 நவம்பர் 2010

தம்பாட்டியில் புலிக்கொடி பறந்தது!

யாழ் மாவட்டம், ஊர்காவற்துறை பிரதேசத்தின் தம்பாட்டி கிராம மீன்பிடிச் சங்க அலுவலகத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டு இருந்ததைத் தாம் கண்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து ஊர்காவற்றுறைப் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்களால் புலிக் கொடி அகற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, இந்தக்கொடி ஏற்றப்பட்ட விடயம் குறித்து தம்பாட்டி மீன்பிடிச் சங்கத் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் பொலிஸாரால் விசாரிக்கப்பட்டு, பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்று தெரிய வந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.