பக்கங்கள்

04 மார்ச் 2011

சிங்கம் சிறையில்,ஆந்தை பணத்தில்,குமுறுகிறார் தயாசிறி!

புதிதாக அச்சிடப்பட்டுள்ள நாணயத் தாள்களில் சிங்கம் காணப்படாமைக்கான காரணம் சிங்கம் சிறையில் இருப்பதாகுமென ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவிக்கின்றார்.
சிங்கத்தை நாணயத் தாளில் மீண்டும் சேர்க்க வேண்டுமாயின் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி ஏற்படுத்தப்பட வேண்டுமென குருநாகல் பகுதியில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றில் அவர் குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில், இன்று அரசாங்கம் 10 ரூபா, 100 ரூபா, 500 ரூபா 1000 ரூபா நாணயத் தாள்களை அச்சிடுகின்றது. அதில் முன்னர் எங்களுடைய அபிமானமிக்க சிங்கம் இருந்தது. இம்முறை சிங்கம் இல்லை. சிங்கத்தை களட்டிவிட்டனர். ஏன்?
சிங்கம் சிறையில் உள்ளது. எங்களுடைய சிங்கம். இந்த நாட்டை மீட்டெடுத்த சிங்கம் சிறையில் உள்ளது. சிறையில் வைத்துவிட்டு நாணயத் தாள்களில் சிங்கத்தை அச்சிட முடியாதென அரசாங்கம் நன்கு அறிந்துள்ளது. அதனால் நாணயத் தாள்களில் ஆந்தையை அச்சிட்டுள்ளனர். சிங்கம் அங்கே உள்ளது. ஆந்தை இங்கே உள்ளது.
நாட்டை மீட்க வேண்டுமாயின், நாணயத் தாளில் ஆந்தையை களட்டி சிங்கத்தை அச்சிட வேண்டுமாயின் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி ஏற்படுத்தப்பட வேண்டும்”. என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.