பக்கங்கள்

14 மார்ச் 2011

மாணவி மர்மமான முறையில் மரணம்!

உடுவில் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட மாணவியின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று ஒப்படைக்கப்பட்டது. வீட்டில் தனித்திருந்த பிரஸ்தாப மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் உடுவில் மானிப்பாய் வீதியில் உள்ள உடுவில் ப.நோ. கூ. சங்கத்துக்குச் சமீபமாகவுள்ள வீடொன்றில் நேற்றுமுன்தினம் மதியம் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி கூறப்படுவதாவது:
கைதடி நுணாவில், சாவகச்சேரியைச் சேர்ந்த மனோகரன் கலைவாணி (வயது 17) என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு மர்மமான முறையில் மரணமாகி உள்ளார் எனக் கூறப்படுகிறது.கைதடி நுணாவில், சாவகச்சேரியைச் சேர்ந்த குறித்த மாணவி தான் கல்வி பயிலும் பாடசாலைக்கு சாவகச்சேரியில் இருந்து தினமும் சென்று வருவது சிரமம் என்பதால் தாயாருடன் உடுவிலில் தங்கியிருந்து கல்வி கற்று வந்துள்ளார்.
நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாணவியின் தாயார் சாவகச்சேரியில் மரண வீடொன்றுக்கு சென்ற சமயமே குறித்த மாணவி மர்மமான முறையில் மரணமாகி உள்ளார்.பின்னர் இவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அங்கு வைக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.