பக்கங்கள்

09 மார்ச் 2011

தமிழ் மக்களை அடிமைப்படுத்தவே தேசிய பாதுகாப்பு சட்டம்!

இலங்கையில் தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் தீவிரவாத தடுப்புச் சட்டம் என்பன ஜனநாயகத்துக்கு எதிராக குரல் எழுப்புபவர்களுக்கு தொந்தரவு கொடுக்கவும் பயமுறுத்தவும் மற்றும் தண்டனை வழங்கவும் பயன்படுத்தப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சாம் ஷரிபி தெரிவித்துள்ளார்.
தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்படாது இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக் கணக்கானவர்களை விடுதலை செய்யுமாறு சர்வதேச மனித உரிமை அமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருசிலர் இரகிசியமான இடங்களில் வைத்து தாக்கித் துன்புறுத்தப்பட்டோ அல்லது அவர் உயிரிழந்தோ இருக்கலாம என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளார்.
மேலும், அண்மையில் கிடைக்கப்பெற்ற உத்தியோபூர்வ அறிக்கைகளின்படி 1900க்கு மேற்பட்டவர்கள் எதுவித நீதிமன்ற விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
இலங்கையில் தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் தீவிரவாத தடுப்புச் சட்டம் என்பன ஜனநாயகத்துக்கு எதிராக குரல் எழுப்புபவர்களுக்கு தொந்தரவு கொடுக்கவும் பயமுறுத்தவும் மற்றும் தண்டனை வழங்கவும் பயன்படுத்தப்படுவதாக ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சாம் ஷரிபி தெரிவித்துள்ளார்.
மேலும், பிரபல்யமான ஒருசில ஊடகவியலாளர்களும்கூட தீவிரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தீவிரவாதிகளாக சந்தேகப்படுபவர்களின் உடமைகளை சீல் வைக்கவும், பரிசோதனை செய்யவும், அவர்களை தடுத்துவைக்கவும் பொலிஸார் மற்றும் இராணுவ பொலிஸாருக்கு ஆணையின்றி செயற்படும் அதிகாரம் இலங்கைச் சட்டத்தில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட எழில் என அறியப்படும் நபரொருவர் 10 வருடங்கள் விசாரணை ஏதுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலண்டனை தளமாக கொண்டு இயங்கும் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளதாக வொஷிங்டன் போஸ்ட் அறிக்கை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் தீவிரவாத தடுப்புச் சட்டம் என்பன ஜனநாயகத்துக்கு எதிராக குரல் எழுப்புபவர்களுக்கு தொந்தரவு கொடுக்கவும் பயமுறுத்தவும் மற்றும் தண்டனை வழங்கவும் பயன்படுத்தப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சாம் ஷரிபி தெரிவித்துள்ளார்.
தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்படாது இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக் கணக்கானவர்களை விடுதலை செய்யுமாறு சர்வதேச மனித உரிமை அமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருசிலர் இரகிசியமான இடங்களில் வைத்து தாக்கித் துன்புறுத்தப்பட்டோ அல்லது அவர் உயிரிழந்தோ இருக்கலாம என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளார்.
மேலும், அண்மையில் கிடைக்கப்பெற்ற உத்தியோபூர்வ அறிக்கைகளின்படி 1900க்கு மேற்பட்டவர்கள் எதுவித நீதிமன்ற விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
இலங்கையில் தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் தீவிரவாத தடுப்புச் சட்டம் என்பன ஜனநாயகத்துக்கு எதிராக குரல் எழுப்புபவர்களுக்கு தொந்தரவு கொடுக்கவும் பயமுறுத்தவும் மற்றும் தண்டனை வழங்கவும் பயன்படுத்தப்படுவதாக ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சாம் ஷரிபி தெரிவித்துள்ளார்.
மேலும், பிரபல்யமான ஒருசில ஊடகவியலாளர்களும்கூட தீவிரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தீவிரவாதிகளாக சந்தேகப்படுபவர்களின் உடமைகளை சீல் வைக்கவும், பரிசோதனை செய்யவும், அவர்களை தடுத்துவைக்கவும் பொலிஸார் மற்றும் இராணுவ பொலிஸாருக்கு ஆணையின்றி செயற்படும் அதிகாரம் இலங்கைச் சட்டத்தில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட எழில் என அறியப்படும் நபரொருவர் 10 வருடங்கள் விசாரணை ஏதுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலண்டனை தளமாக கொண்டு இயங்கும் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளதாக வொஷிங்டன் போஸ்ட் அறிக்கை தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.