பக்கங்கள்

18 மார்ச் 2011

புலிகள் இயக்க முக்கியஸ்தரென கருதப்படுபவருக்கு தொடர்ந்து விளக்கமறியல்.

விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் சீலன் மற்றும் அவருடைய சகாக்கள் பதின்மூன்று பேரை விளக்கமறியலில் வைக்குமாறு ஸ்ரீலங்கா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.சீலனுடன் இணைந்து கொழும்பின் முக்கிய இடங்களில் குண்டுகளை வெடிக்க வைத்ததாகவும், அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் ஏனையவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு, வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டிருப்பவர்களில் ஆறு தமிழர்கள், நான்கு சிங்களவர்கள் மற்றும் மூன்று முஸ்லிம்கள் உள்ளடங்கியிருந்தனர். அவர்கள் கடந்த 2009ம் ஆண்டில் ஸ்ரீலங்கா பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களுக்கெதிரான குற்றச்சாட்டுகள் தனித்தனியாக ஸ்ரீலங்கா நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக அவர்களை எதிர்வரும் மே மாதம் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.