பக்கங்கள்

13 மார்ச் 2011

மகிந்தவின் விஜயத்தால் திருமலையில் பலத்த சோதனை கெடுபிடி!

இன்று (13) திருமலையில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரத்தில் பங்குபற்றும் நோக்கத்துடன் சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா பயணம் மேற்கொள்ளவுள்ளதால் அங்கு அதி உச்ச பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூராட்சி சபை தேர்தலில் திருமலை மாவட்டத்தில் போட்டியிடும் அரச தரப்பினரை உற்சாகப்படுத்தும் முகமாக மகிந்தா தேர்தல் கூட்டத்தில் உரையாற்றவுள்ளதாக அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மகிந்தா உரையாற்றவுள்ள மக்ஹெய்சர் விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் வீதிகளில் படைகள் குவிக்கப்பட்டுள்ளதுடன், கடுமையான சோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
திருமலைக்கு செல்லும் எல்லா வாகனங்களும் நிறுத்தப்பட்டு சல்லடையிட்டு சோதனையிடப்படுவதாக திருமலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.