பக்கங்கள்

14 மார்ச் 2011

கிறிஸ்மஸ்தீவில் புகலிடக்கோரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்!

கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தடுக்க அவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
தங்களுடைய அகதி அந்தஸ்து குறித்து ஒரு தீர்மானமும் எடுக்கப்படாமல் நீண்டகாலமாக கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்கள் கடந்த சனி ஞாயிறு தினங்களில் தமது எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன் ஒரு கட்டமாக அந்த அகதி முகாமைச் சுற்றிப் போடப்பட்டிருந்த வேலிகளைப் பிடுங்கி எறிந்ததோடு, கதவுப் பூட்டுக்களையும் சில தங்குமிடங்களையும் சிலர் சேதப்படுத்தி உள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக இந்த ஆர்ப்பாட்டத்தை அமைதிப்படுத்த அதிகாலை 3.37 மணியளவில் தாம் கண்ணீர்ப்புகைப்பிரயோகம் செய்ய நேர்ந்ததாகப் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக்கலவரத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவருக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது வைத்தயசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சனி ஞாயிறு தினங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரங்களில் அங்கிருந்து 150 பேர் தப்பிச் சென்றிருந்தர். எனினும் அவர்களில் பலர் தாமாகவே மீண்டும் திரும்பி வந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அங்கு நடைபெற்ற கலவரங்கள் குறித்தும் பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர்ப்புகைப் பிரயோகம் குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குடிவரவு குடியகல்வு அமைச்சர் கிறிஸ் பிறவுண் தெரிவித்துள்ளார்.
அவர்கள் தமக்கு ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே குழப்பத்தில் இறங்கியுள்ளனர். அது புரிந்து கொள்ளக் கூடியது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். ஆனால் இவ்வாறான குழப்பங்களும் அங்கிருந்து தப்பிப் போதலும் அவர்கள் விரும்புகிற முடிவை அடைய அவர்களுக்கு ஒரு போதும் உதவப் போவதில்லை என்றும அவர் தெரிவித்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.