பக்கங்கள்

11 மார்ச் 2011

லண்டனுக்கு புறப்பட்ட சுழிபுரம் இளைஞரை காணவில்லை!

லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் சென்று விட்டு மீண்டும் லண்டன் செல்வதற்காக புறப்பட்ட இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுழிபுரம் தொள்புரத்தைச் சேர்ந்த 24 வயதுடைய தெய்வேந்திரம் குவைத் என்பவரே இவ்வாறு காணாமல் போயிருக்கின்றார்.
லண்டனில் வசித்து வருகின்ற இவர் கடந்த 1ம் திகதி பண்டாரநாயக்கா விமான நிலையம் ஊடாக கொழும்பை சென்றடைந்திருந்தார். 3ம் திகதி யாழ்ப்பாணம் தொல்புரத்திலுள்ள தனது குடும்பத்துடன் இணைந்திருந்தார். பின்னர் நேற்று முன் தினம் இவர் கொழும்பிற்கென புறப்பட்டுச் சென்றதாகவும் எனினும் நேற்று மாலை வரை அவர் கொழும்பை சென்றடையவில்லை எனவும் இவருடனான தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவரது கைத்தொலைபேசி செயலிழந்து காணப்படுவதாகவும் கைத் தொலைபேசிக்கு அழைப்புகள் விடுக்கப்பட்ட போதும் பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக இன்றிரவு குடும்பத்தினர் வட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் முறைப்பாடும் செய்துள்ளனர். லண்டனில் சென்று ஒருவாரம் தங்கியிருந்த நிலையில் மீண்டும் 15ம் திகதி லண்டன் திரும்புவதற்காக இவர் விமானப் பயணச் சீட்டும் பெற்றிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.