பக்கங்கள்

28 மார்ச் 2011

மகிந்தவின் அழைப்பை நிராகரித்த நியூசிலாந்து.

நாளை (29) கொழும்பில் நடைபெறும் அரையிறுதி துடுப்பாட்டத்தை கண்டுகளிக்க வருமாறு சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா விடுத்துள்ள கோரிக்கையை நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துடுப்பாட்டத்தையும் அரசியலாக்கி அதில் லாபம் காண எண்ணிய மகிந்தா ராஜபக்சாவுக்கு இது ஏமாற்றமாக இருந்தாலும், சிறீலங்கா மற்றும் இந்தியாவுக்கான நியூசிலாந்து தூதுவரை இந்த போட்டியை காண்பதற்கு இந்தியாவில் இருந்து சிறீலங்கா வருமாறு சிறீலங்கா மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. தென் ஆபிரிக்காவை தோற்கடித்த நியூசிலாந்து நாளை (29) சிறீலங்காவுடன் மோதவுள்ளது. மகிந்தாவின் அழைப்பை நிராகரித்துள்ள நியூசிலாந்து பிரதமரின் பேச்சாளர் அதற்கான காரணத்தை தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆனால் சிறீலங்காவுக்கான தூதுவரை துடுப்பாட்ட போட்டியில் கலந்துகொள்ள வருமாறு சிறீலங்கா அரச தலைவரின் ஊடகப்பிரிவின் தலைவர் பந்துல ஜெயசேகரா அழைப்பு விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.