பக்கங்கள்

11 மார்ச் 2011

முதலிரவுடன் மாயமான ஊர்காவற்றுறை மாப்பிள்ளை!

திருமணத்திற்கு முன்னர் மணப்பெண்ணுடன் முதலிரவை முடித்து விட்டு திருமணத்தன்று மாப்பிள்ளை மாயமாக மறைந்து போனார்.
இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை அராலிப் பகுதியில்இடம் பெற்றது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இம்மாப்பிள்ளை ஊர்காவற்றுறையை சேர்ந்தவர் இவர் அராலியிலுள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்து தொழில் நிமித்தம் வெளிநாட்டிற்கு செல்வதற்கு முயற்சித்து வந்த வேளை அங்கிருந்த இளம் பெண்ணொருவருக்கு கடலை போட்டிருக்கின்றார்.
பின்னர் பெண்ணின் தாயை மெதுவாக மடக்கி தானும் அவரது மகளும் ஒருவரையொருவர் நேசிப்பதாகவும் குறித்த பெண்ணுக்கும் விருப்பம் என்று பொய் கூறியதுடன் அவரையே திருமணம் செய்ய விரும்புவதாகவும் தெரிவித்து திருமண ஏற்பாடுகளை செய்யும்படி கேட்டுள்ளார்.
இதனை அறிந்த பெண் தான் அவரை விரும்ப வில்லையென்று தாயிடம் தெரிவித்ததுடன், அப் பெண் உண்மையில் விரும்பியவருடன் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்.
இதனால் ஏமாற்றமடைந்தவர் பெண்ணின் தாயிடம் திருமணம் என்று ஒன்று செய்தால் உங்களுடைய குடும்பத்தில்தான் திருமணம் என்று வீரவசனங்கள் பேசி அவர்கள் அனைவரை மயக்கியுள்ளார்.
வீரவசனத்தில் மயங்கியவர்கள் மானிப்பாயில் தந்தையிழந்த நிலையில் வசித்து வந்த தங்களுடைய உறவினரான பெண்ணொருவருக்கு அவரை திருமணம் செய்து வைக்க உரிய செயற்பாடுகளை மேற்கொண்டனர்.
இப்போது பதிவுத்திருமணமே செய்ய விரும்புவதாகவும் வெளிநாடு சென்று திரும்பிய பின்னர் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் பதிவுத்திருமணம் நடைபெறவிருந்த நிலையில் அதற்கு முதல் நாளே அப்பெண்ணுடன் முதலிரவை முடித்துக்கொண்ட இவர் அதிகாலையில் யாருக்கும் தெரியாமல் பறந்து சென்று விட்டார்.
இந்நிலையில் செய்வதறியாத பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தவர்கள் கண் கலங்கிய நிலையில் மாப்பிள்ளையை தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.