பக்கங்கள்

12 மார்ச் 2011

ஸ்ரீலங்காவில் சுயநல ராஜபக்ஸ குடும்ப ஆட்சியே நடைபெறுகிறது!

யுத்தத்துக்கு பின்னர் அபிவிருத்தியை நோக்கி இலங்கை பயணித்துக் கொண்டிருந்தாலும், மறுபுறத்தில் இராணுவ ஆட்சியைத் தழுவிய, சுயநலவாத, ராஜபக்ஷ குடும்ப ஆட்சியே காணப்படுவதாக பாக்கியசோதி சரவணமுத்து குற்றம் சுமத்தியுள்ளார்.
மாற்றுக் கொள்கைகளுக்கான அமைப்பின் தலைவரான பாக்கியசோதி சரவணமுத்து, ஜெனீவாவில் கடந்த 9ம் திகதி நடைபெற்ற மனித உரிமைகள் மாநாட்டின் அமர்வில் உரையாற்றும்போதே இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் பிரச்சினைகளுக்கான தீர்வு ஒன்றுக்கு தொடர்பில் மனித உரிமைகளை அறிக்கைப்படுத்தும் சர்வதேச பொறிமுறை ஒன்று இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களை மறந்து எதிர்காலம் நோக்கி செல்லலாம் என அரசாங்கம் கூறுகின்ற போதும், முறையான புனர்நிர்மாண, புனர்வாழ்வளிப்பு இன்றி, கடந்த காலங்களை மறக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், இலங்கையில் தற்போது பல அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் அவை தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களாக உள்ளதெனவும் அவர் கூறியுள்ளார். இந்த அபிவிருத்தி செயற்பாடுகள் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படாமல், தன்னிச்சையாக திணிக்கப்பட்டு வருவதாகவும் பாக்கியசோதி சரவணமுத்து குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.