பக்கங்கள்

04 மார்ச் 2011

ஸ்ரீலங்காவின் முன்னாள் கடற்படை தளபதியை தூதராக ஏற்கக்கூடாது!

பொதுமக்கள் மீது எறிகணைத் தாக்குதலை மேற்கொண்ட முன்னாள் கடற்படைத் தளபதியை தூதுவராக நியமிப்பது வருத்தமானது. இந்த முடிவை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என அவுஸ்திரேலியாவின் தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் மோர்பி நேற்று (03) தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கன்பராவின் தூதுவராக சிறீலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் சமரசிங்காவை நியமிப்பது வருத்தம் தருகின்றது.
நான் இங்கு தமிழ் மக்களின் பிரதிநிதியாக வந்துள்ளேன். அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் மக்களை நான் பிரதிநிதித்துவப்படுத்துகின்றேன். அதன் மூலம் எனது வருத்தத்தை தெரிவிக்கின்றேன்.
நாம் எல்லோரும் ஒன்றை கவனிக்கவேண்டும். அதாவது சிறீலங்கா கடற்படையின் தளபதியாக இருந்த சமரசிங்காவின் காலத்தில் தான் வன்னியின் கடற்கரையோரம் தஞ்சமடைந்த மக்கள் மீது கப்பல்களில் இருந்து கண்மூடித்தனமாக பீரங்கித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இவ்வாறான மனிதரை எவ்வாறு எமது நாட்டில் தூதுவராக நியமிக்கலாம். ஐ.நாவுக்கான சிறீலங்காவின் பிரதிநிதி பாலித கோகன்னா தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் அவுஸ்திரேலியா அரசு சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
அவுஸ்திரேலியாவின் இரட்டைக் குடியுரிமை கொண்ட இவர் சரணடைந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களின் படுகொலைகளுடன் தொடர்புள்ளவர் என கருதப்படுகின்றது.
2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் நாள் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த பலரை சிறீலங்கா படையினர் படுகொலை செய்திருந்தனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.