பக்கங்கள்

23 மார்ச் 2011

இரு தமிழர்களுக்கு அவுஸ்திரேலியா புகலிடம் வழங்கியது.

அவுஸ்திரேலியாவில் புகலிடம் மறுக்கப்பட்ட இரண்டு இலங்கையர்களுக்கு மீள புகலிடம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிறிஸ்மஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இவ்வாறு புகலிடம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டால் ஆபத்து ஏற்படக் கூடும் என்ற அடிப்படையில் குறித்த நபர்களுக்கு புகலிடம் வழங்கப்பட்டுள்ளது.
விமானம் அல்லது படகு மூலமாக அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்த புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஒரே விதமான சட்டங்களே அமுல்படுத்தப்படும் என அந்நாட்டு உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கிறிஸ்மஸ் தீவுகளில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் வன்முறைகள் ஆரோக்கியமானதல்ல என அந்நாட்டு எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.