பக்கங்கள்

10 மார்ச் 2011

தேர்தல் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலைப்படுகிறது!

சிறீலங்காவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலை முன்னிட்டு அங்கு வன்முறைகள் அதிகரித்து வருவதால் ஐரோப்பிய ஒன்றியம் கவலை அடைந்துள்ளதாக சிறீலங்கா மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் அலுவலகம் நேற்று (09) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறீலங்காவில் இடம்பெற்றுவரும் தேர்தல் வன்முறைகள் உக்கிரமடைந்துள்ளன. அங்கு இருவர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்துள்ளனர். நியாயமானதும், சுயாதீனமானதுமான தேர்தல் நடைபெறுவதற்கு அமைதியான சூழ்நிலை அவசியம்.
எனவே தேர்தலில் போட்டியிடும் கட்சிகளும், வேட்பாளர்களும் அமைதியான முறையில் செயற்ப்பட வேண்டும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.