பக்கங்கள்

25 மார்ச் 2011

வழக்குத்தாக்கல் செய்தவருக்கே விழுந்தது ஆப்பு!

ஸ்ரீலங்காவின் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை நேற்று கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.கண்டி மாவட்டத்தை சேர்ந்த பத்மசிறி பாலசூரிய என்பவர் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
சரத் என் சில்வா பதவியில் இருந்த போது, தமது பதவியை துஸ்பிரயோகம் செய்துள்ளதாகவும், தன்னிச்சையாக செயற்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தெரிவித்திருந்தார்.
தம்மை போலியான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்து, 294 நாட்கள் சிறையில் வைத்திருந்ததாகவும், இதனால் தமக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு 10 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்க வேண்டும் எனுவும் அவர் கோரியிருந்தார்.
எனினும் இந்த வழக்கு அடிப்படை அற்றது என கூறி, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த வழக்கை நிராகரித்தது.
அத்துடன் குறித்த வழக்குக்கு செலவான பணத்தின் நான்கு மடங்கு தொகையை சரத் என் சில்வாவுக்கு வழங்க வேண்டும் எனவும், மனுதாரரான பாலசூரியவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.