பக்கங்கள்

07 மார்ச் 2011

வழிபாடுகளுக்கும் தடை விதிக்கும் ஸ்ரீலங்கா படைகள்!

வன்னியில் இடம்பெற்ற போரில் இடம்பெயர்ந்து தற்போதும் சிறீலங்கா அரசின் தடுப்பு முகாம்களில் வசிக்கும் மக்கள் மத வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் சிறீலங்கா அரசு அனுமதிகளை வழங்குவதில்லை என த ஏசியன் கத்தோலிக் நியூஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிறீலங்கா அரசின் தடுப்பு முகாம்களில் இருந்த பெருமளவான மக்கள் விடுவிக்கப்பட்டபோதும், தற்போதும் அங்கு 27,000 தமிழ் மக்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு தங்கியுள்ள மக்கள் தாம் வழிபடுவதற்கு வெளியில் செல்லவேண்டும் என விடுக்கும் கோரிக்கைகளை சிறீலங்கா பாதுகாப்பு படையினர் புறக்கணித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மெனிக் பாஃம் முகாமில் முன்னர் தங்கியிருந்த கத்தோலிக்க மதகுருமார் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள கத்தோலிக்க மக்கள் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தேவாலயங்களுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சிறீலங்கா அரசின் தடுப்பு முகாம்களில் மிகப்பெரும் உளவியல் அழுத்தங்களுடன் தங்கியுள்ள தமிழ் மக்களுக்கு மத வழிபாடுகள் தான் சிறு ஆறுதலை தரும் விடயமாக இருந்துவருகின்றது. ஆனால் சிறீலங்கா படையினர் தற்போது அதனையும் தடுத்து வருவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.