பக்கங்கள்

22 மார்ச் 2011

மீசாலையில் எரிந்த நிலையில் பெண்ணின் உடலம்!

யாழ், தென்மராட்சி மீசாலைப் பகுதியில் பழைய வீடொன்றிலிருந்து நேற்றைய தினம் பி.ப. 2.00 மணியளவில் எரிந்த நிலையில் காணப்பட்ட பெண்னொருவரின் சடலத்தை சாவகச்சேரிப் பொலிஸார் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட சடலம் மீசாலையைச் சேர்ந்த சச்சிதானந்தம் உமாப்பிரியா(வயது 25)என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்ட சாவகச்சேரி நீதவான் எம்.கணேசராசா சடலத்தைப்பிரேத பரிசோதனைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். சாவகச்சேரிப் பொலிசார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.