பக்கங்கள்

25 மார்ச் 2011

வடமராட்சி கடற்பகுதியில் இந்திய கடற்படையினர்.

வடமராட்சிக் கடற்பரப்பில் நேற்று இந்தியக் கடற்படையினரின் நடமாட்டம் அதிகமாக இருந்தது என்று வடமராட்சி வடக்கு கடற் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் எஸ்.எமிலியாம்பிள்ளை தெரிவித்தார்.
வழமைக்கு மாறாக நேற்றுக் காலை முதல் மாலை வரை வடமராட்சிக் கடற்பரப்பில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இந்தியக் கடற்படையினரின் அதிவேகப் படகுகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, நேற்றுமுன்தினம் மாலை 6 மணியளவில் கடலில் தொழிலுக்குச் சென்ற வல்வெட்டித் துறை ஆதிகோயிலடியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் நேற்று அதிகாலை 2 மணியளவில் கடலில் வைத்து இந்திய மீனவர்களால் தாக்கப்பட்டதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் எமிலியாம்பிள்ளை தெரிவித்தார்.
கடந்த மூன்று நாள்களில் இந்திய மீனவர்களால் கடத்தப்பட்ட ஐந்தாவது மீனவர் இவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.