பக்கங்கள்

05 மார்ச் 2011

இந்தோனேசியா அகதி அந்தஸ்து வழங்குகிறது!

கடந்த 2009 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் வழியில் இந்தோனேசியா கடற்பரப்பில் வைத்து இந்தோனேசியா அரசினால் தடுத்துநிறுத்தப்பட்ட ஈழத்தமிழ் மக்களுக்கு அகதித்தஞ்சம் வழங்க இந்தனோசியா அரசு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
கடந்த 2009 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் வழியில் இந்தோனேசியா கடற்பரப்பில் வைத்து 254 ஈழத்தமிழ் மக்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அவுஸ்திரேலியா பிரதமர் கெவின் றுட்டின் வேண்டுகோளுக்கு இணைங்கவே அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் இந்தோனியாவின் பின்ரன் தீவில் உள்ள தன்ஞங் பினங் தடைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு அடைக்கலம் வழங்க தற்போது இந்தோனேசியா முன்வந்துள்ளது.
முதற்கட்டமாக 10 பேர் அகதித்தஞ்சம் வழங்கப்பட்டு விடுவிக்கப்படவுள்ளதுடன், ஏனையவர்களும் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக நிமல் நிமலகரன் என்பவர் தடுப்பு முகாமில் இருந்து தெரிவித்துள்ளார். நிமலன் எதிர்வரும் வாரம் விடுவிக்கப்படவுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.