பக்கங்கள்

21 மார்ச் 2011

லிபியா மீதான தாக்குதலை ஜே.வி.பி கண்டிக்கிறது.

லிபியாவில் இடம்பெற்றுவரும் வான் தாக்குதல்கள் கண்டனத்திற்குரியன, அமெரிக்கர்களை எதிர்த்து லிபிய மக்கள் போராடவேண்டும் என சிறீலங்காவின் தென்னிலங்கை அரசியல் கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அது நேற்று (20) வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
அமெரிக்காவின் முதலாளித்துவத்திற்கு எதிராக லிபியா போராடவேண்டும். இறுதி வெற்றிவரை லிபிய மக்கள் போராடவேண்டும். லிபியாவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக அவர்கள் போர் தொடுக்கவில்லை, மாறாக அங்குள்ள எண்ணை வழங்களை கையகப்படுத்தவே மேற்குலகம் முயன்றுவருகின்றது.
ஜனநாயகம் வேண்டி வட ஆபிரிக்கா மற்றும் அரபு நாடுகளில் பல மில்லியன் மக்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர். அதற்கு நாம் எமது ஆதரவுகளை வழங்குவோம்.
துனீசியா மற்றும் எகிப்பதில் நடைபெற்ற போராட்டங்களில் மக்கள் அந்த அரசுகளை தூக்கியெறிந்தபோதும், தற்போது அந்த நாடுகளின் நிர்வாகத்தை மேற்குலகமே கைப்பற்றியுள்ளது.
ஈராக்கில் நடத்தியதை போலவே லிபியாவிலும், நேட்டோ நாடுகளின் போர்வையில் அமெரிக்கா தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது. ஆனால் நாம் லிபிய மக்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவுகளை வழங்கத்தயாராக உள்ளோம். மேற்குலகம் தமது தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.