பக்கங்கள்

17 மார்ச் 2011

பேயிடமிருந்து பிசாசிடம் வந்தோம்,பிசாசு எம்மை பிராண்டி விட்டது!

ம.தி.மு.க., வுக்கு சீட் வழங்காதது குறித்து நாஞ்சில் சம்பத் திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அவர், ‘’ அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா எங்கள‌ை புறக்கணித்து தற்கொலைக்கு இணையான தீங்கை தனக்கு தானே இழைத்துக் கொண்டது.
நாங்கள் 23 சீட் கேட்டிருந்தும், எந்த வித ஆலோசனையும் நடத்தாமல் வெறும் 9 சீட் மட்டுமே வழங்க அ.தி.மு.க., முன்வந்தது, திட்டமிட்டே ம.தி.மு.க., புறக்கணிக்கப்பட்டுள்ளதையே உணர்த்துகிறது. பேயிடம் இருந்து பிசாசிடம் வந்தோம், பிசாசு எங்களை பிராண்டி விட்டது.
இதற்கான பலனை அது அனுபவிக்கும். ஜெயலலிதா விலை போய் விட்டார்.
ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் 3வது அணி அமைந்தால் மட்டும் தான் அதை ஏற்றுக்கொள்வோம், விஜயகாந்த் தலைமையை ஏற்றுக் ‌கொள்ளமுடியாது.
வைகோவின் அதிரடி முடிவுகளால் தான் ம,தி.மு.க.,வுக்கு பின்னடைவு ஏற்பட்டு வருவதாக பரவலாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது, எனவே தான் வைகோ இம்முறை அமைதி காத்து வருகிறார். இருப்பினும் ம.தி.மு.க.,வின் இறுதி முடிவு வருகிற சனிக்கிழமை (19ம் தேதி) கட்சி உயர்நிலைக்கூட்டத்துக்ப் பின்னர் அறிவிக்கப்படும்’’ என்று ஆவேசமாக கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.