பக்கங்கள்

01 மார்ச் 2011

புலிகளின் அனைத்துலக செயற்பாடுகள் தொடர்கின்றன என்கிறார் சமரசிங்க!

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் உரையாற்றிய சிறீலங்கா அமைச்சர் மகிந்தா சமரசிங்கா புலம்பெயர் தமிழ் சமூகத்தை குறிவைத்து தனது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (28) அவர் ஆற்றிய உரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
விடுதலைப்புலிகளின் அனைத்துலக செயற்பாடுகள் தொடர்கின்றன. நாட்டை பிரிப்பதற்கான அவர்களின் நிகழ்ச்சி நிரலும் பின்பற்றப்படுகின்றது. அண்மையில் வெளிநாடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களில் 10 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். 23 இடங்களில் தேடுதல்கள் நடைபெற்றிருந்தன. பல நாடுகள் தமிழ் மக்கள் மீதான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
படையினர் வசம் தற்போது 4599 தமிழ் இளைஞர்கள், யுவதிகளே உள்ளனர். 11,693 பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோதும் ஏனையவர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டனர். முகாம்களில் 12,000 மக்களே உள்ளனர். அவசரகாலச்சட்டத்தை அவதானமாகவே நீக்க முடியும். உரிய கால அட்டவணையின் அடிப்படையில் அது நீக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.