பக்கங்கள்

20 மார்ச் 2011

ஸ்ரீலங்காவின் எதிர்க்கட்சியான ஐ.தே.கவின் தலைவர் யார்?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் அவரின் போட்டியாளரான சஜித் பிரேமதாஸ ஆகியோர் மத்தியில் யார் தலைவர் என்ற விடயம், நாளை கூடவுள்ள, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் போது தீர்மானிக்கப்படவுள்ளது
ரணில் விக்கிரமசிங்கவை பொறுத்தவரை, தாமே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என தெரிவித்து வருகிறார்.
இந்தநிலையில் இதுவரை காலமும், தாமே தலைவராக வேண்டும் எனக் கூறி வந்த சஜித் பிரேமதாஸ, தற்போது இந்த விடயத்தில் இணக்கம் ஏற்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இணக்கம் ஒன்றின் மூலமே, கட்சியின் தலைமை பிரச்சினையை தீர்க்கமுடியும் என்று சஜித் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாளை கூடவுள்ள, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில், இணக்கமான முறையில் தலைவர் ஒருவரை தெரிவுசெய்வதற்கான முனைப்புகள் மேற்கொள்ளப்படும்,
அதில் இணக்கம் ஏற்படாவிட்டால், இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று கட்சித் தரப்புகள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.