பக்கங்கள்

29 மார்ச் 2011

மன்மோகனைப்பார்த்து நியுசிலாந்தை அழைத்து ஏமாந்த மகிந்தர்.

இந்தியாவின் மொஹாலி நகரில் நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் துடுப்பாட்ட போட்டியை பார்வையிடுவதற்கு வருமாறு பாகிஸ்தான் அதிபருக்கு இந்திய பிரதமர் அழைப்பை விடுத்ததை அறிந்துகொண்ட சிறீலங்கா அரச தலைவர் நியூசிலாந்து பிரதமருக்கு அழைப்பு விடுத்ததாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது: நாளை (30) புதன்கிழமை இந்தியாவில் நடைபெறும் துடுப்பாட்டத்தின் அரையிறுதிப் போட்டியில் கலந்துகொள்ளவருமாறு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் அதிபர் யூசுஃப் ராசா கிலானிக்கு அழைப்பை விடுத்திருந்தார். புதன்கிழமை நடைபெறும் போட்டியில் இந்திய – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. எனினும் இந்திய பிரதமரின் அழைப்பை ஏற்றுக்கொண்ட பாகிஸ்தான் அதிபர் போட்டியை காணவருவதாக தெரிவித்துள்ளார். இதனை அறிந்துகொண்ட சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா தானும் நியூசிலாந்து பிரதமரை அழைத்திருந்தார். ஆனால் அதனை அவர் நிராகரித்தது சிறீலங்காவுக்கு மிகப்பெரும் அவமானமாகிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே, இன்று (29) கொழும்பில் நடைபெறும் துடுப்பாட்டத்தின் அரையிறுதிப்போட்டிக்கு வரலாறுகாணாத பாதுகாப்புக்களை வழங்க தான் திட்டமிட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறை மாஅதிபர் மகிந்தா பாலசூரியா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.