பக்கங்கள்

15 மார்ச் 2011

பிரதமர் உருத்திரகுமாரன் ஜப்பானுக்கான மனுவை கையளித்தார்!

இரண்டாம் உலகப் போருக்கு பின்னார் வராலாறு காணாத பெரும் துயரையும் ,நெருக்கடியையும் சுமந்து நிற்கின்ற ஜப்பானிய தேசத்துக்கு, தமிழ் மக்களுடைய ஆழ்ந்த கவலைiயும், அக்கறைiயும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க-நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான, ஜப்பானின் உயர்காரியாலத்துக்கு (மார்ச் 14 திங்கட்கிழமை) சென்ற பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்கள், ஜப்பானிய பிரதமர்க்கு கிடைக்கும் வகையில் மனுவை ஒன்றை கையளித்துள்ளார்.
ஜப்பானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானிய மக்களின் துன்ப, துயரங்களில் தமிழீழ மக்களும் பங்கெடுப்பதாகவும், இத்தகைய பெருந்துயரில் இருந்து ஜப்பானிய மக்கள் மீண்டு எழுந்து வருவார்கள் என தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் அந்த மனுவில் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.