பக்கங்கள்

06 மார்ச் 2011

ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் நூறு ஏக்கர் கே,பி,க்கு அன்பளிப்பு!

சிறீலங்கா அரசுடன் இணைந்து செயற்படும் விடுதலைப்புலகளின் முன்னாள் உறுப்பினர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பிக்கு வன்னியில் 100 ஏக்கர் நிலத்தை சிறீலங்கா அரசு வழங்கியுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
சிறீலங்கா அரசுடன் இணைந்து செயற்பட்டுவரும் குமரன் பத்மநாதன் அமைத்துள்ள அரசசார்பற்ற நிறுவத்தின் தேவைகளுக்காக சிறீலங்கா அரசு வன்னியில் 100 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது.
கடந்த சில மாதங்களாக கே.பி யாழ்ப்பாணத்திற்கும், வன்னிக்கும் அடிக்கடி பயணம் மேற்கொண்டு வருகின்றார். வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் விடுதலைப்புலிகளின் முன்னாள் ஆதரவாளர்களைக்கொண்டு ஒரு கட்சியை அமைக்கவும் பத்தமநாதன் முயன்று வருகின்றார்.
தடுப்புக்காவலில் உள்ள தமிழ் இளைஞர்களை விடுதலை செய்வதற்கு உதவுவதாக கே.பி மக்களிடம் தெரிவித்து வருகின்றார். ஆனால் அதனை அவர் இன்றுவரை மேற்கொள்ளவில்லை.
வடபகுதியின் எந்தப் பகுதிக்கும் கே.பி சென்றுவரமுடிகின்றது. ஆனால் ஏனைய எதிர்க்கட்சிகளுக்கு அரசு தடைவித்து வருகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.