பக்கங்கள்

20 ஜனவரி 2011

வாய் பேசா பெண்மீது கடற்படையினன் வல்லுறவு!

வாய்பேச முடியாத பெண்ணொருவர் திருகோணமலை மாவட்டத்தின் கிராமமொன்றில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலையின் ரொட்டவெவ பிரதேசத்தில் அமைந்திருக்கும் எத்தாபெந்திவெவ எனும் கிராமத்தைச் சோ்ந்த வாய் பேச முடியாத பெண்ணொருவரே கடற்படைச்சிப்பாய் ஒருவரால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
வல்லுறவுக்குட்பட்ட பெண் தற்போது திருமலை அரசினர் பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அறியப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தங்கை கொடுத்த முறைப்பாட்டின் பேரில் சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படைச்சிப்பாய் நேற்று ரொட்டவெவ பொலிசாரால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.