பக்கங்கள்

27 ஜனவரி 2011

நிந்தவூரில் நிலம் வெடித்து பாரிய குழி ஏற்பட்டுள்ளது!

நிந்தவூரில் நேற்று முற்பகல் பாரிய சப்தத்துடன் வீடொன்றின் முற்றத்தில் நிலவெடிப்பு ஏற்பட்டு குழியொன்று வெளித் தோன்றியுள்ளதாக பிரதேச செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளித் தோன்றியுள்ள குழியின் ஆழம் சுமார் எட்டு அடி இருக்கும் என்பதாக மேலதிகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சப்தம் கேட்டு குறித்த இடத்துக்குச்சென்று நோட்டமிட்ட வீட்டின் உரிமையாளர் பிரஸ்தாப குழியைக் கண்டு, அது குறித்து பிரதேச செயலாளருக்கு அறிவித்துள்ளார்.
நிந்தவூர் பிரதேச செயலாளர் ஹனீபா பிரஸ்தாப வீட்டுத் தோட்டத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன், அது குறித்து கொழும்பிலுள்ள சுரங்க மற்றும் கனிய வளங்கள் திணைக்களத்துக்கும் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே அண்மையில் திருமலையின் குச்சவெளியில் தோன்றியுள்ள குழிகளுக்கும் நிந்தவூரில் தோன்றியுள்ளதற்கும் ஏதேனும் ஒற்றுமைகள் காணப்படுகின்றதா என்ற கோணத்திலும் ஆய்வுகளை முன்னெடுக்குமாறு அம்பாறை அரச அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.