பக்கங்கள்

30 ஜனவரி 2011

யாழின் பாதுகாப்பிற்கு படைகளின் பிரசன்னம் அவசியம் என்கிறார் ஜெகத்.

யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பிற்கு இராணுவத்தின் பிரசன்னம் அவசியமானது என இராணவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பாதுகாப்பு தரப்பினர் இன்னமும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்து 20 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் அதிகளவு இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத ஒழிப்பு தொடர்பில் நடைபெறவுள்ள சர்வதேச கருத்தரங்கு தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகள் தங்களது ஆயுதங்களை காட்சிப்படுத்துவதற்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.