பக்கங்கள்

09 ஜனவரி 2011

யாழில் பல குற்றச்செயல்கள் இடம்பெற்றபோதும் ஒருவர் மட்டுமே கைது!

யாழ்பாணத்தில் கடந்த மாதத்தில் நான்கு கொலைகள், மூன்று பாலியல் வல்லுறவுகள், மூன்று கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள போதிலும் இதுவரை ஒருவர் மாத்திரமே கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்தினர் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிலைகொள்ளச் செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மக்கள் இரவு 7 மணிக்குப் பின்னர் வீடுகளின் கதவுகளைத் திறப்பதில்லை. அவர்கள் மிகவும் அச்சத்துடன் வாழ்ந்துவருவதாகவும் சிரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். மக்கள் தமது பிரச்சினைகள் குறித்து முறைப்பாடு செய்ய காவல் நிலையங்களுக்குச் சென்றாலும் சில முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுவதில்லை என்பதுடன் அக்கறையும் காட்டப்படுவதில்லை எனவும் விசாரணைகள் நடத்தப்படுவதாக கூறப்பட்ட போதிலும் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கடமையில் ஈடுபட்டுள்ள நிலையிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.