பக்கங்கள்

11 ஜனவரி 2011

நெடுந்தீவு குறிகாட்டுவான் குமுதினி சேவை விரைவில்.

எட்டுக்கோடி ரூபா செலவில் திருத்தி அமைக்கப்பட்ட குமுதினி பயணிகள் படகு விரைவில் குறிகட்டுவான் நெடுந்தீவு கடற்பயணத்திற்கு ஈடுபடுத்தப்படவிருப்பதாக யாழ். மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இப்படகு அடுத்தவாரம் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளது. இப்படகு பழுதடைந்தமையால் கடந்த இரண்டு மாத காலமாக நெடுந்தீவு படகுச்சேவை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.
தற்போது குறிகட்டுவான் நெடுந்தீவு கடல்பயணத்துக்கு சாதாரண வள்ளங்கள் மூலமே சேவை நடைபெற்று வருகின்றது. மீள நிர்மாணிக்கப்பட்டுள்ள பயணிகள் படகு 300 பேர் பயணம் செய்யக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.