பக்கங்கள்

12 ஜனவரி 2011

படைத்தளமாக மாறும் மாவீரர் துயிலும் இல்லங்கள்!

யாழ் மாவட்டத்திலுள்ள விடுதலைப்புலிகளது முக்கிய மாவீரர் துயிலும் இல்லங்களில் ஒன்றாக இருந்த கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் வலிகாமத்தின் முக்கிய ராணுவத் தளமாகின்றது. மிகப் பெரிய படைத்தளம் ஒன்று அங்கு அமைக்கப்பட்டுள்ளது. நிரந்தர அரையிறுதி தகரங்களைக் கொண்டு இந்தத் தளம் அமைக்கப்பட்டுள்ளது.
மாவீரர் துயிலும் இல்லத்தின் முகப்பு நுழைவாயிலை இடித்து வீழ்த்தியுள்ள படைத்தரப்பு அதனை ராணுவ தளத்திற்கேற்ற வகையில் வடிவமைத்தும் இருக்கின்றது.
இப்பகுதிகளில் பொதுமக்கள் போக்குவரத்தில் ஈடுபடவும் கடந்த சில வாரங்களாக தடை விதிக்கப்பட்டும் இருந்தது.
இந்த நிலையில் யாழ் நகரில் உள்ள ஞானம்ஸ் ஹோட்டேல் மற்றும் சுபாஸ் ஹொட்டேல் என்பன உள்ளிட்ட பொதுமக்களது விடுதிகள் மற்றும் தனியார் கட்டிடங்கள் வர்த்தக நிலையங்களில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகின்ற 512 வது படைத்தளம் அடுத்து வரும் சில நாட்களில் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு நகரவுள்ளது.
இதேவேளை யாழ் நகரின் புறநகர்ப்பகுதிகளில் அதாவது பண்ணை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சீன அரசின் உதவியின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தளங்களுக்கு ஒரு பகுதியும் பிரதான அலுவலகங்கள் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லப்பகுதிக்கும் நகர்த்தப்படவுள்ளது.
ஏற்கனவே வடமராட்சி மற்றும் தென்மராட்சி பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களும் இடிக்கப்பட்டு அப்பகுதிகளிலும் பாரிய ராணுவத் தளங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.