பக்கங்கள்

16 ஜனவரி 2011

புறக்கோட்டையில் வர்த்தகர் சுட்டுக்கொலை!

புறக்கோட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிக்கப்படுகிறது.
புறக்கோட்டை மிஹிந்து மாவத்தையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
கித்சிறி ராஜபக்ஷ என்ற வர்த்தகரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொலையுண்ட வர்த்தகர் ஐக்கிய தேசியக் கட்சி தொகுதி அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதாள உலகக் கோஷ்டியினர் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தகரின் சகோதரர் ஒருவர் அண்மையில் படுகொலை செய்யப்பட்டிருந்ததாகவும், அதன் பின்னர் கொலையுண்ட நபர் காவல்துறையினரிடம் பாதுகாப்பு கோரியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் வர்த்தகரின் வீட்டுக்கு அருகாமையில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாகக் குறிப்பிடப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.