பக்கங்கள்

20 ஜனவரி 2011

படையினனிடமிருந்து தப்பித்துக்கொள்ள வயலுக்குள் பாய்ந்த தமிழ் பெண்!

யாழ்ப்பாணத்தில் தமிழ்ப் பெண்ணொருவர் இராணுவ சிப்பாயொருவரிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வயலுக்குள் பாய்ந்து காயங்களையேற்படுத்திக் கொண்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.
பிரஸ்தாப பெண் ஹலோ ட்ரஸ்ட் எனும் கண்ணிவெடி அகற்றும் அமைப்பில் பணியாற்றுபவர் என்றும், வேலைக்காகச் செல்லும் வழியிலேயே அவர் மேற்கண்ட துர்ப்பாக்கிய சம்பவத்துக்கு முகம் கொடுத்திருப்பதாகவும் எமது யாழ். நிருபர் தெரிவித்துள்ளார்.
நாவலடி வீதியின் வழியாக அவர் தனது மோட்டார் சைக்கிளை உருட்டிக்கொண்டு சென்று கொண்டிருக்கையில் திடீரென்று வேலியொன்றுக்குள்ளிருந்து வெளிப்பட்ட இராணுவச்சிப்பாய் ஒருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்து கொண்டதையடுத்து அப்பெண் சத்தமிட்டவாறு அருகிலிருந்த வயலுக்குள் பாய்ந்துள்ளார்.
அவரது அபயக்குரல் கேட்டு அயலவர்கள் திரண்டு வரவும், குறித்த படைச்சிப்பாய் தலைமறைவாகி விட்டார். ஆயினும் பொதுமக்கள் தேடிப்பிடித்து அந்தச் சிப்பாயை விசாரித்துள்ளனர்.
வழியால் சென்றவர் ஒரு ஆணாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தேநீர் வாங்கி வருவதற்கு தன்னை மோட்டர் சைக்கிளில் ஏற்றிச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளவே தான் வெளியில் வந்ததாக அந்தப் படைச்சிப்பாய் பதிலளித்துள்ளார்.
ஆயினும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் தெரியாதளவுக்கா அந்தச்சிப்பாய் இருக்கின்றார் என்று பொதுமக்கள் விசனத்துடன் கேள்வியெழுப்பியுள்ளனர். தற்போது சம்பவம் தொடர்பில் பல தரப்பினருடனும் புகார் செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.