பக்கங்கள்

22 ஜனவரி 2011

கொலைக்குடும்ப வாரிசை வாழ்த்திய ரவிசங்கர்!

இலங்கை வந்துள்ள வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர் குருஜி ஜனாதிபதியின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்ஷவுக்குப் பொன்னாடை போர்த்தி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ சிறந்த சமூக சேவைகளை முன்னெடுப்பதாகப் பாராட்டியே ரவிசங்கர் குருஜி அவருக்குப் பொன்னாடை போர்த்தியுள்ளார்.
2600 வது வருட புத்த ஜயந்தியை முன்னிட்டு இளைஞர்களுக்கான நாளை அமைப்பும், வாழும் கலை அமைப்பும் இணைந்து அறநெறி நிகழ்ச்சியொன்றை முன்னெடுத்துள்ளன. கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் அதன் ஆரம்ப வைபவம் இடம்பெற்றது.
அதன் போது பெங்களூரிலிருந்து வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர் குருஜியும் வருகை தந்திருந்தார். விழா மேடையில் வைத்தே அவர் நாமலின் சேவைகளைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் வாழும் கலை அமைப்பின் செயற்பாடுகளை இளைஞர்களுக்கான நாளை அமைப்புடன் இணைத்து முன்னெடுப்பது குறித்தும் இருவரும் கலந்தாலோசித்துள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.