பக்கங்கள்

19 ஜனவரி 2011

யாழில் இந்தியப்படை காடையன் இளம்பெண் மீது காடைத்தனம்!

யாழ்ப்பாணத்தின் பொது இடமொன்றில் வைத்து இளம் யுவதியொருத்திக்கு பட்டப்பகலில் முத்தம் கொடுத்து இந்தியப் படைவீரரொருவர் அட்டகாசம் புரிந்துள்ளதாக யாழ். நிருபரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய அலுவலகத்தில் கடமையாற்றும் இந்தியப் படைவீரர் ஒருவரே அவ்வாறு அநாகரீமாக நடந்து கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவிக்கின்றார்.
குறித்த படைவீரர் தூதுவராலயத்துக்கு எதிரில் அமைந்திருக்கும் கடைக்குச் சென்ற சந்தர்ப்பத்திலேயே அங்கு வந்த இளம் யுவதி ஒருவருக்கு கன்னத்தில் முத்தமிட்டு அநாகரீமாக நடந்து கொண்டுள்ளார்.
உடனடியாக பொதுமக்களும் அந்த யுவதியும் சோ்ந்து அந்தப் படைவீரரை கடுமையாக எச்சரித்ததுடன், விடயத்தை அத்துடன் முடித்துவிட்டனர். பொலிசில் முறைப்பாடு செய்யவும் இல்லை. யுவதியின் மானம் குறித்து கருத்திற் கொண்டு விடயம் அப்படியே மறைக்கப்பட்டுள்ளது.
ஆனால் தூதுவராலயத்துக்கு குறித்த சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த வீரருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென தூதுவராலய அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.