பக்கங்கள்

15 ஜனவரி 2011

யாழ் சம்பவங்களுக்கு தமிழரின் பிரிவினைவாதமே காரணமாம்!

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து சமாதானம் மலர்ந்துள்ள போதிலும் மக்களிடையே குரோதத் தன்மை அதிகரித்து காணப்படுவதாகவும் குறிப்பாக தமிழர்களிடையே பிரிவினைவாதம் தோன்றியுள்ளதாகவும் சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கை பேரவையின் தலைவர் வெல்லன்வில விமலரத்ன தேரர் குறிப்பிடுகின்றார்.
யாழில் இடம்பெறும் கொலை, கொள்ளை, கடத்தல் போன்ற சம்பவங்களுக்கு தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பிரிவினைவாதமே காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே அனைவரும் ஒன்றினைந்து மலர்ந்துள்ள சமாதானத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த செய்தியாளர் மாநாட்டில் தொடர்ந்து பேசிய அவர் தெரிவித்ததாவது :-
தமிழர்கள் மத்தியில் பிரிவினைவாதம் அதிகரித்துள்ளது. யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் மக்கள் மத்தியில் குரோதத் தன்மை அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் பிரிவினைவாதம் தலைத்தூக்கியுள்ளது. இந்த பிரிவினைவாதம் காரணமாகவே யாழில் கொலை, கொள்ளை, கடத்தல் போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. யுத்தம் நிறைவடைந்து சமாதானம் மலர்ந்துள்ளது. எனவே சமாதானத்தை நிலைநாட்டுவதற்காக பிரிவினைவாதம் ஏற்படாத வன்னம் தடுத்து நிறுத்த வேண்டும் இதற்கான நடவடிக்கைள் மேற்ககொள்ளப்படவேண்டும். பிரிவினைவாதத்திற்கான வாய்புக்கள் ஏற்படுவதைத் தடுக்க அனைவரும் ஒன்றினைந்து செயற்படவேண்டும். மலர்ந்துள்ள சமாதானத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளோம். யாழ், வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, அநுராதபுரம், பதுளை, நுவரெலியா, கண்டி, களுதரை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் பிரதிநிதிகளை நியமித்து சமயம், மற்றும் ஏனைய விடயங்களில் மக்களுக்குள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து அதற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.