பக்கங்கள்

11 ஜனவரி 2011

காலை வேளையில் சுழிபுரத்தில் கொள்ளை!

வீட்டில் காலை 8.30 மணியளவில் தனித்திருந்த குடும்பப்பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 25 பவுண் நகைகளைச் சூறையாடிச்சென்றுள்ளனர் கொள்ளையர். இந்தச் சம்பவம் சுழிபுரம் பத்திரகாளி கோயிலடிப்பகுதியில் நேற்றுக் காலை இடம் பெற்றுள்ளது. இந்தச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
கணவர் வீட்டிலிருந்து வேலைக்குப் புறப்பட்ட பின்னர் குளித்து விட்டுச் சுவாமியறையில் கும்பிட்டுக்கொண்டிருந்தபோது மூன்று இளைஞர்கள் கத்தியுடன் வந்து கழுத்தில் அழுத்தி வீட்டில் உள்ள நகைகளைத் தரும்படி மிரட்டியுள்ளனர்.அப்போது அந்தப்பெண் வீட்டில் இருந்த "கவரிங் நகைகளை அள்ளிக்கொடுத்தார்."எங்களுக்குக் கவரிங் நகை ஒறிஜினல் நகை எதுவென்று தெரியும். மரியாதையாக நகையெல்லாத்தையும் எடுத்துத்தாடி, இல்லையென்றால் உன்னைக் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
அச்சமடைந்த அந்தப்பெண் வீட்டில் இருந்த நகைகளை எடுத்துக் கொடுத்துவிட்டார்.நகைகளை வாங்கிக் கொண்டு "உன்ரை தாலிக்கொடி எங்கையடி?� என்று மிரட்டினர்."அது வங்கியிலை அடைவு� என்று கூறினாராம் பெண்மணி."அதையும் விரைவில் எடுத்து வையடி. திரும்பியும் வரு வோம்� என்று கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் பறந்து சென்றனர் கொள்ளையர்.
இந்தச் சம்பவம் குறித்து யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.கொள்ளைக்கு வந்த அந்த மூன்று பேரும் சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர்களாகக் காணப்பட்டதுடன்,சரளமாகத் தமிழில் கதைத்ததாகவும் அந்தப் பெண் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.