பக்கங்கள்

26 ஜனவரி 2011

அனுராதபுரம் சிறைக்கைதிகள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர்!

அனுராதபுர சிறை அதிகாரியை கைதுசெய்யக் கோரியும்,வெளியில் இருந்து சிறைச்சாலைக்கு கொண்டு செல்லும் உணவுகள் மீதான கண்ணகாணிப்பு, உணவு போதாமை மற்றும் சிறைச்சாலை சனநெரிசல் என்பவற்றை முன்வைத்து அநுராதபுரம் சிறைச்சாலைக் கைதிகள் இன்று புதன்கிழமை மற்றுமொரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற மோதல் சம்பவத்தின்போது கைதியொருவரை சுட்டுக்கொன்றதாக கூறப்படும் சிறை அதிகாரியை கைதுசெய்யுமாறு கோரி அநுராதபுரம் சிறைக்கைதிகள் மற்றுமொரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இக்கைதிகள் எந்த ஆகாரமுமின்றி கூரை மீதேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
அநுராதபுர சிறைச்சாலையில் மற்றுமொரு கைதிகள் குழு இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.