பக்கங்கள்

23 ஜனவரி 2011

திருமலை குச்சவெளியில் நிலம் பிளவடைந்துள்ளது!

திருகோணமலை, குச்சவெளி பிரதேசத்தில் இன்று அதிகாலை நில வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குச்சவெளி, கலப்பையாறு சுனாமி வீடமைப்பு திட்டத்துக்கு பின்னால் அமைந்துள்ள களப்பு பகுதிலேயே இச்சம்பவம் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.
அப்பகுதியில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தினை காணச்செல்லும் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதனால் குறித்த பிரதேசத்திற்குள் பொதுமக்கள் பிரவேசிக்காதவாறு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இது தொடர்பில் ஆராய்வதற்காக கொழும்பிலிருந்து அனர்த்த முகாமைத்துவ நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் திருகோணமலைக்குப் பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தினால் பிரதேச மக்கள் ஒருசிலர் நகரப் பகுதிகளில் உள்ள தங்கள் உறவினர்களது வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.