பக்கங்கள்

17 ஜனவரி 2011

புலிகளின் ஐந்து கப்பல்கள் தொடர்பான விபரம் கிடைத்துள்ளதாம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஐந்து கப்பல்கள் தொடர்பான தகவல்களை சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.
புலிகளுக்கு சொந்தமான எட்டு கப்பல்கள் தொடர்பான விசாரணைகளின் இந்த ஐந்து கப்பல்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் கிடைக்கப் பெற்றதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
புலிகளின் ஐந்து கப்பல்கள் பழுதடைந்துள்ளதாகவும் அவற்றை பழுது பார்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நீர் வடிகாலமைப்புத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பல்களின் நிறத்தையும், பெயரையும் மாற்றி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த கப்பல்களை கைப்பற்றி இலங்கைக்கு கொண்டு வரும் வகையில் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.