பக்கங்கள்

25 ஜனவரி 2011

சென்னையில் உள்ள பெளத்த மகாபோதி தாக்கப்பட்டுள்ளது!

இந்தியாவின் சென்னையில் அமைந்துள்ள மஹாபோதி பௌத்த கேந்திர நிலையம் நேற்றிரவு (24) தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக் கடற்படையால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்திய மீனவரின் கொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்டோரே இத்தாக்குதலை மேற்கொண்டிருக்கக் கூடும் என்பதாக சந்தேகிக்கப்படுகின்றது.
பதினைந்துக்கும் அதிகமான முச்சக்கர வண்டிகளில் இரவு ஒன்பது மணியளவில் அவ்விடத்துக்கு வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மகாபோதி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு கற்கள் மற்றும் தடிகள் கொண்டு தாக்கியுள்ளனர்.
தாக்குதல் காரணமாக அங்கிருந்த நான்கு போ் சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளனர். தற்போது பௌத்த கேந்திர நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலதிக பொலிசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கைக் கடற்படையால் இந்திய மீனவர்கள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.