பக்கங்கள்

03 ஜனவரி 2011

உயர்மட்ட மாநாட்டுக்கு இமெல்டா அழைப்பு.

யாழ்க்குடாநாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற ஆட்கடத்தல்கள் படுகொலைகள் தொடர்பாக உயர்மட்ட மகாநாடு ஒன்றுக்கு அரச அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ்க்குடாநாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற ஆட்கடத்தல்கள் படுகொலைகள், காணாமல் போனமை தொடர்பாக உயர்மட்ட மகாநாடு ஒன்றுக்கு தான் அழைப்பு விடுத்திருப்பதாக அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இன்று மதியம் இடம்பெற்ற ஊடகவிலாளர் மகாநாட்டின் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டிருந்தார். இதன் பிரகாரம் யாழ் மாவட்ட ராணுவத் தரப்பு மற்றும் யாழ் மாவட்ட சிரேஸ்ட காவற்துறைத் தரப்பு உள்ளிட்ட பல தரப்பி;னரும் இந்த மகாநாட்டுக்கு அழைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
புத்தாண்டை அடுத்து படையதிகாரிகள் மற்றும் காவற்துறையினர் தமது சொந்த இடங்களான தெற்கிற்கு சென்றிருக்கின்றார்கள். அவர்கள் கடமைக்கு திரும்பி வர வேண்டும். அவர்கள் வந்தவுடன் இந்த உயர்மட்ட மகாநாடு இடம்பெறும் எனுவம் அவர் ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவித்தார்.
தான் திடீரென குடாநாட்டின் நகரப் பகுதிக்கு நேற்று சென்று இரவிரவாகப் பார்வையிட்டதாகவும் பல இடங்களில் காவற்துறையினரின் ரோந்து நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கவில்லை எனவும் பல இடங்களில் குற்றச்செயல்கள் மோசமாக அதிகரித்துக் காணப்படுவதாகவும் அரச கட்சிகளின் ஒத்துழைப்பினை நபர்கள் துஸ்பிரயோகம் செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். குறிப்பாக பெண்கள் வீடுகளில் நடமாட முடியாத நிலை இரவு நேரத்தில் முற்றாக ஏற்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிலை தொடர்ந்து நீடிப்பதனை அனுமதிக்க முடியாது. கைதுகள், காணாமல் போதல்கள் படுகொலைகள் என்பன தொடர்பில் குடாநாட்டு மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். இந்த நேரத்தில் அபிவிருத்தி தொடர்பாக பேசுவது பொருத்தமானது அல்ல. உடனடியாக இவற்றை தடுத்து நிறுத்த வேண்டும்.
இதற்கு படைத்தரப்பினரினும் காவற்துறையினரினதும் ஒத்துழைப்புத் தேவையாக இருக்கின்றது. இந்த நிலையிNலுயெ அவசர மகாநாட்டிற்கு தான் அழைப்பு விடுத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.