பக்கங்கள்

15 ஜனவரி 2011

நீர்வேலியில் வீடொன்றினுள் புகுந்த சிப்பாய் மடக்கிப் பிடிப்பு!

யாழ்ப்பாணம் நீர்வேலிப்பகுதியில் படைமுகாமிலிருந்து வெளியே சென்று வீடொன்றினுள் உட்பிரவேசித்து யுவதி ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முற்பட்டதாக சந்தேகிக்கப்படும் சிப்பாய் ஒருவர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டுள்ளார். வீட்டினுள் புகுந்த இந்த சிப்பாய் தொடர்பில் வீட்டில் தங்கியிருந்தவர்கள் அவலக்குரல் எழுப்பியதனை அடுத்து குறித்த சிப்பாய் தப்பி ஓட முற்பட்டுள்ளார். இதனையடுத் அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் சுற்ற வளைத்துக் கொண்டனர்.
எனினும் தான் நீர்வேலி படைமுகாமைச் சேர்ந்த சிப்பாய் என அடையாளப்படுத்தியிருந்தார். எனினும் பொதுமக்கள் கிடைத்த சந்தர்ப்பத்தை தவற விடவில்லை. மோசமான நையப்புடையலுக்குப் பின்னர் கோப்பாய் காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சையளிக்க வேண்டியிருப்பதாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் படைத்தலைமைக்கு இது தொடர்பாக அறிவித்திருப்பதாகவும் கோப்பாய் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இதே நீர்வேலி முகாம் பகுதிலேயே வயோதிபப் பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவத்தை அடுத்து மக்கள் போராட்டங்கள் இடம்பெற்று துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.