பக்கங்கள்

08 டிசம்பர் 2011

காதல் பிரச்சனையால் நிகழ்ந்த துப்பாக்கி சூடு!

ஹம்பேகமுவ – சமகிகம – கொட்டவெஹர மங்கட பிரதேசத்தில் நால்வர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு துப்பாக்கிதாரி தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்றிரவு 08.30-09.30 வரையான காலப்பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நால்வரில் மூவர் உயிரிழந்துள்ளதோடு ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் 55வயது ஆண், 45 வயது பெண் மற்றும் 24 வயதுடைய யுவதி ஆகியோரே உயிரிழந்துள்ளதோடு 19 வயதுடைய யுவதி படுகாயமடைந்துள்ளார். சம்பவத்தில் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டவர் 22 வயதுடைய இளைஞன் ஆவார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 19 வயது யவதியுடன் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட 22 வயது இளைஞன் காதல் தொடர்பை பேணி வந்துள்ளார். அதனால் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக இத்துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிப் பிரயோகத்தில் குறித்த யுவதியின் தாய், தந்தை மற்றும் சகோதரியும் உயிரிழந்துள்ளனர். ஹம்பேகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.